தமிழக - கேரள நதிநீர் பங்கீடு...அதிகாரிகள் குழு பேச்சுவார்த்தை...


தமிழக கேரள நதிநீர் பிரச்சனை தொடர்பாக இருமாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் முதற்கட்ட பேச்சுவார்த்தையை சென்னையில் துவங்கியுள்ளனர்.


தமிழகம் - கேரளாவுக்கு இடையிலான நதிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது குறித்து, கடந்த செப்டம்பர் மாதம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கேரளா சென்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார்.


அப்போது இருமாநிலங்களுக்கிடையேயான நதிநீர் பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதற்காக, தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசகன் தலைமையில் ஒரு குழுவும், கேரள அரசு சார்பில் அம்மாநில நீர்வள ஆதாரத்துறை செயலாளர் அசோக் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.


இந்நிலையில் சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், இந்த குழுவினர் முதற்கட்ட பேச்சுவார்த்தையை துவங்கினர். இன்று நடைபெறும் முதல் கூட்டத்தில், பரம்பிக்குளம் ஆழியாறு நீர்திட்டம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


மேலும் பல்வேறு கட்டங்களாக தொடர்ந்து நடைபெறவுள்ள கூட்டங்களில், பாண்டியாறு - புன்னம்புழா, நீராறு - நல்லாறு திட்டம், நெய்யாறு திட்டம், செண்பகவள்ளி நீர்வழிப்பாதை சீரமைப்பு என பல்வேறு திட்டங்கள் மற்றும் நீர்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இதன் பின்னர் 2வது கட்ட பேச்சுவார்த்தை கேரளாவில் விரைவில் நடைபெற இருக்கிறது.